அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணிகள் : ரொம்ப.. ரொம்ப சூப்பராம்!! ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டி அறிக்கை!!

அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணிகள் : ரொம்ப.. ரொம்ப சூப்பராம்!! ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டி அறிக்கை!!

Update: 2019-08-14 09:11 GMT


அத்திவரதர் தரிசன நிகழ்வில், காவல்துறையின் பாதுகாப்புப்பணியை ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டி அறிக்கை அளித்துள்ளது. இதற்குமுன் எந்த நிகழ்விலும் இதுபோன்று அந்தச் சங்கம் பாராட்டியதில்லையாம்.


இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தலைவர் டிஜிபி. பிரதீப் வி பிலிப் அறிக்கை:


“அத்திவரதர் நிகழ்ச்சியை அமைதியாகவும், நல்லபடியாகவும் பொதுமக்கள் தரிசிக்க தமிழக காவல்துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. அந்தப்பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு காவல்துறையைச் சேர்ந்த காவலரையும் ஐபிஎஸ் சங்கம் பாராட்டுகிறது.


சமூகத்தின் அனைத்து தரப்பினரும் காவல்துறையினரை மதித்து அவர்களின் கடமைகளை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஐபிஎஸ் சங்கம் இந்தப்பணியில் ஈடுபட்ட காவல்துறையின் ஒவ்வொரு நபருடைய சேவையையும் பாராட்டுகிறது”.


இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதர் பணியில் ஆட்சியரின் செயல் கடந்த சில நாட்களாக விமர்சனத்துக்குள்ளான நிலையில், போலீஸாரின் பணியை ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது போலீஸாருக்கு மன நிம்மதியை அளித்துள்ளதாக பலரும் கருதுகின்றனர்.


Similar News