சென்னையில் இறைச்சிக் கடைகளை மூடுவதில் மாநகராட்சி புதிய உத்தரவு..

சென்னையில் இறைச்சிக் கடைகளை மூடுவதில் மாநகராட்சி புதிய உத்தரவு..

Update: 2020-04-04 05:04 GMT

சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் வரும் ஏப்ரல் 22 ந்தேதி வரை மூடிவிட வேண்டும் என நேற்று மாநகராட்சி உத்தரவிட்டிருந்ததாக செய்திகள் வெளி வந்தன.

ஆனால் இப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் தனது புதிய உத்தரவில் - சமூக இடைவெளியுடன் முத்திரையிட்ட இறைச்சி மட்டுமே விற்கப்படும் கடைகளுக்கு அனுமதி என்றும், அதிகாரபூர்வ முத்திரை இன்றி விற்கப்பட்டால் அந்த இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும், இது கடைக்காரர்களின் பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் திங்கள கிழமை அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மீன், கோழி, ஆடு, மாடு இறைச்சிக் கடைகளும் மூடப்படவேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Similar News