திருவண்ணமலை மலை உச்சியில் தங்கியிருந்த சீன நாட்டுக்காரர் சிக்கினார்.. சிறப்பு வார்டில் சோதனை..

திருவண்ணமலை மலை உச்சியில் தங்கியிருந்த சீன நாட்டுக்காரர் சிக்கினார்.. சிறப்பு வார்டில் சோதனை..

Update: 2020-04-07 04:42 GMT

திருவண்ணாமலைக்கு ஆன்மீகப்பயணம் வந்த வெளிநாட்டுகாரர்கள் அனைவரும் கொரோனா தொற்று எச்சரிக்கை காரணமாக சில நாட்களுக்கு முன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தீபமலை மீது செல்வதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.




 


அதன்பேரில் போலீசார் சென்று பார்த்தபோது மலை மீது உள்ள ஒரு ஆஸ்ரமம் அருகே தங்கியிருந்த 35 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கீழே அழைத்து வந்தனர்.விசாரணையில், அந்த வாலிபர் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கை சேர்ந்த யாங்யாஊரி என்பதும், கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்து தங்கியிருப்பதும் தெரியவந்தது.

மேலும், அவர் கடந்த 25ம் தேதி முதல் தீபமலை மீது ஏறிச்சென்று அங்கேயே கடந்த 10 நாட்களாக தங்கியதும் தெரிந்தது.இதையடுத்து, அவர் சீனாவை சேர்ந்தவர் என்பதால், கொரோனா நோய்த்தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில், பரிசோதனைக்காக திருவண்ணாமலை தனியார் மருத்துவனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News