புதுச்சேரி: சீன பொருட்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர்!

புதுச்சேரி: சீன பொருட்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர்!

Update: 2020-06-19 13:05 GMT

இந்திய- சீன எல்லையில் சீன இராணுவத்தினர் நுழைய முற்பட்ட போது இந்தியா மற்றும் சீனா இராணுவத்தினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது இதில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர், சீனாவின் இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.


இதனிடையே புதுச்சேரி மாநில பா.ஜ.க சார்பில் பாஜக மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் இந்திரா காந்தி சிலை அருகே சீன பொருட்களை ரோட்டில் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர், மேலும் தாக்குதலில் உயிரிழிந்த இந்திய வீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Similar News