சீன விவகாரத்தில் ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சொந்த கட்சியை சேர்ந்த மிலிந்த் தியோரா.!
சீன விவகாரத்தில் ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சொந்த கட்சியை சேர்ந்த மிலிந்த் தியோரா.!
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சீன அத்துமீறல் விஷயத்தில் அரசைக் குறை சொல்வது நாட்டில் பிரிவினை இருப்பதைக் காட்டிக் கொடுப்பது போலாகும் என்று கூறிய மிலிந்த் தியோரா ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட மோதல் குறித்து மோடி அரசை குற்றம்சாட்டியதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ராகுல்காந்தியை சாடினார். இப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இந்த விஷயத்தில் அரசியல் செய்வது சரியல்ல என்று கூறியுள்ளார். சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் இருபது பேர் உயிரிழந்துள்ள நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசை பற்றி தவறான கருத்துக்களை கூறுவது சரியல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களின் உபயோகமின்றி எல்லைப்பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் ஊகத்தின் அடிப்படையில் 40 சீன வீரர்கள் இறந்ததாக கூறப்பட்டாலும், சீனா இறப்பை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளது, இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தவில்லை.
அவர் அரசியல் காழ்ப்பணர்சியால் சீனாவின் அத்துமீறலுக்கு அரசை குறை கூறி கருத்துக்களை வெளியிடுவது துரதிஷ்டவசமானது. இந்த தருணத்தில் சீனாவிற்கு எதிராக கண்டனங்களை எழுப்பவேண்டும்.அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும். ஆனால் நாம் நமது நாட்டின் பிளவுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று ட்வீட் செய்துள்ளார்.
It's highly unfortunate that the national discourse surrounding the surge in Chinese transgressions has deteriorated into political mud-slinging.
— Milind Deora मिलिंद देवरा (@milinddeora) June 27, 2020
When we should be united in condemning China's actions & seeking solutions, we are exposing our divisions
இருந்தபோதிலும், இவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அவரது பேச்சு அவரது சொந்தக் கட்சியான காங்கிரஸ் மற்றும் தலைவரை குறிப்பிடுவதாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மற்ற தலைவர்கள் மத்திய அரசுக்கு துணை நிற்காமல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்ட மோதலுக்கு மத்திய அரசை குற்றம் சாட்டுகின்றனர்.எதிரி நாடுகள் அச்சுறுத்தல் விடுக்கும் இந்நேரத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவது ஒரு விதிமுறை ஆகும்.