காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல்!
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல்!
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ ஏதுவாக உளவு பார்த்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான ட்ரோன் நிழல்பட கருவியை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
பயங்கரவாதிகலுக்கு ஆயுத உதவியை பாகிஸ்தான் உளவு அமைப்பு ட்ரோன் கருவி உதவியுடன் இந்திய எல்லையில் வீசி செல்வதாக கூறபட்ட நிலையில் இந்திய இராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பயங்கரவாதிகலுக்கு நேரடியாக பாகிஸ்தான் ராணுவம் உதவி வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக இந்திய இராணுவத்துடன் நேரடி மோதலில் இன்று பிற்பகல் முதல் நிகழ்த்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பத்தினால் 4 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.