இந்தியாவில் குறைந்த அளவு கரியமில வாயுவை வெளியேற்றக்கூடிய போக்குவரத்துக்கு திட்டம் துவக்கம்!
இந்தியாவில் குறைந்த அளவு கரியமில வாயுவை வெளியேற்றக்கூடிய போக்குவரத்துக்கு திட்டம் துவக்கம்!
இந்தியாவில் கரியமில வாயு பயன்பாடு குறைவாக உள்ள போக்குவரத்துக்கு வழிவகுக்கக் கூடிய "இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்து" குறித்த ஆய்வை, நிதி ஆயோக் அமைப்பு சர்வதேசப் போக்குவரத்து அமைப்புடன் இணைந்து, 24 ஜுன், 2020 அன்று தொடங்க உள்ளது.
போக்குவரத்துக் கொள்கை வகுத்தல் தொடர்பான அரசுகளுக்கிடையேயான அமைப்பான, சர்வதேசப் போக்குவரத்து அமைப்பில், 2008-ஆம் ஆண்டு முதல் இந்தியா உறுப்பினராக உள்ளது.
இணையவழியில் நடைபெற உள்ள தொடக்க விழாவில், சர்வதேசப் போக்குவரத்து அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. யங் தே கிம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி திரு.அமிதாப்காந்த் ஆகியோர் கூட்டாகத் தொடங்கிவைக்க உள்ளனர்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளின் உயர் அதிகாரிகளும், சர்வதேசப் போக்குவரத்து அமைப்பின் அதிகாரிகளும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
இணையவழியில் மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சியின் போது, இந்தியாவில் உள்ள போக்குவரத்து மற்றும் பருவநிலை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கப்படும். இந்தியாவின் போக்குவரத்து முறையில் எதிர்கொள்ளப்பட்டு வரும் சவால்கள் மற்றும் கரியமில வாயு குறைப்புக்கான நோக்கத்துடனான தொடர்பு பற்றிய தகவல்களும் வழங்கப்படும்.
இந்த விவாதத்தின் போது, இந்தியாவிற்கென தேவைப்படும் குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து கவனம் செலுத்த உதவும்.