தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார் எடியூரப்பா : அலுவலகப் பணிகளை காணொலி வாயிலாக கவனிக்கப் போவதாக அறிவிப்பு.!

தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார் எடியூரப்பா : அலுவலகப் பணிகளை காணொலி வாயிலாக கவனிக்கப் போவதாக அறிவிப்பு.!

Update: 2020-07-10 13:14 GMT

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் சில திங்களுக்கு முன்பு செய்யப்பட்டன. இந்த நிலையில் சோதனை அறிக்கையில் சிலருக்கு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் எத்தனை பேருக்கு என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் முதல்வரின் வீடு மற்றும் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் எடியூரப்பா இன்று முதல் சில நாட்களுக்கு வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், வீட்டில் இருந்தே அலுவலக பணிகளை காணொலி வாயிலாக கவனிக்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தனிமனித இடைவெளியை சரியாக பின்பற்றி, மாஸ்க் அணிந்து, சுகாதார விதிகளை கடைப்பிடித்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

Similar News