பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரானா தொற்று உறுதி - அதிர்ச்சியில் தமிழக திரையுலகம்.!
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரானா தொற்று உறுதி - அதிர்ச்சியில் தமிழக திரையுலகம்.!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த பாதிப்பையடுத்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இதன் பாதிப்பு குறைவதாக தெரிவதில்லை. இந்த பாதிப்புக்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோருக்கும் இந்த பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா சோதனை மேற்கொண்டார். கொரோனா சோதனை முடிவில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து இவர் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.