பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான், இந்த நேரத்திலும் கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் பாகிஸ்தான்.!

பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான், இந்த நேரத்திலும் கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் பாகிஸ்தான்.!

Update: 2020-04-18 04:11 GMT

பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நாரவனே குற்றசாட்டு

உலகமே கொரோனா நோயை கட்டுபடுத்த போராடி வரும் சூழலில் நமது அண்டை நாடான பாகிஸ்தான் உலகிற்கு பயங்கரவாதிகளை கொடையாக வழங்கி பெருமை சேர்த்து கொள்கிறது 

காஷ்மீர் பகுதியில் எல்லை கோட்டை மீறி கடந்த ஒருவாரமாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி அட்டுழியம் செய்துவருகிறது

காஷ்மீர் எல்லை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய சென்ற ராணுவ தளபதி எம்.எம்.நாரவனே செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது 

இந்திய அரசு உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்து மக்களை காக்க உழைத்து வருகின்றது

உலக நாடுகளுடன் இனைந்து கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் உதவிசெய்து வருவது பெருமையாக இருக்கிறது

பாகிஸ்தான் உலக நாடுகளின் மக்களுக்கு அச்சுறுத்தலான பயங்கரவாத்தை அருள்கொடையாக ஏற்றுமதி செய்கிறது

பாகிஸ்தான் ராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு பயிற்ச்சி அளித்து இந்தியாவிற்கு அனுப்பி வருகிறது இதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது

ராணுவத்தில் 8 வீரர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று உள்ளது அவர்களும் விரைவில் குணமடைவார்கள் என தெரிவித்தார்.

Similar News