சாமானியரை மத்திய அமைச்சராக்கினார், நரேந்திர மோடி! பாஜகவில் மட்டுமே இது சாத்தியம்!!
சாமானியரை மத்திய அமைச்சராக்கினார், நரேந்திர மோடி! பாஜகவில் மட்டுமே இது சாத்தியம்!!
குடிசையில் வசிக்கும் ஒருவர், சைக்கிளில் பயணம் செய்யும் ஒருவர், தொடர்ந்து மக்கள் தொண்டாற்றி வரும் ஒருவர், தன்னை எதிர்த்துபோட்டியிட்ட இருபெரும் கோடீஸ்வர்களை தோற்கடித்த ஒருவர் நரேந்திர மோடி அமைசரவையில், சிறு, குறுந்தொழில்துறை மேம்பாட்டு இணை அமைச்சராக இணைத்து அழகு பார்த்துள்ளார், பிரதமர் நரேந்திரமோடி.
ஒடிசாவைச் சேர்ந்த அந்த எளிய மனிதரின் பெயர் பிரதாப் சந்திர சாரங்கி.
மத்திய மந்திரிகள் 58 பேரில் நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருப்பவர் பிரதாப் சந்திர சாரங்கி. 64 வயதாகும் இவர் ஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தில் உள்ள கோபிநாத்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஏழையான இவர், 1975 - ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தார். சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் கொண்ட இவர், ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து ஏழை-எளியவர்களுக்கு தேவையான சமுதாய பணிகளை செய்து வந்தார்.
துறவியாக விரும்பிய இவர், கல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கிருந்தவர்கள், வயதான விதவை தாயை கவனிக்குமாறு சொல்லி திரும்பி அனுப்பிவிட்டனர். இதனால் அவர் ஒடிசா திரும்பினார். மண்சுவர் கொண்ட குடிசையில் வாழ்ந்து வரும் இவர், மிகவும் எளிமையாகவே வாழ்ந்து வருகிறார்.
தனது குடிசை வீட்டுக்கு முன்பு தெருவோர அடிபம்பில்தான் குளிக்கிறார். மலைவாழ் மக்களுக்காக பலாசூர், மயூர்கஞ்ச் மாவட்டங்களில் ஏராளமான பள்ளிக்கூடங்களை தொடங்கி உள்ளார்.
ஏழ்மை, சேவை மற்றும் மக்கள் நலனில் கொண்ட அக்கறை காரணமாக இவரை ஒடிசா மாநில மக்கள் “ஒடிசாவின் மோடி” என்று செல்லமாக அழைக்கிறார்கள். இவர் 2004 முதல் 2009 வரையும், 2009 முதல் 2014 - ஆம் ஆண்டு வரையும் நிலகிரி சட்டசபை தொகுதியில் இருந்து தேர்வாகி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.