இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் படுகொலை : கம்யூனிஸ்ட் குண்டர்களால் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு #CPMTerror

இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் படுகொலை : கம்யூனிஸ்ட் குண்டர்களால் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு #CPMTerror

Update: 2019-02-18 18:59 GMT

கேரள மாநிலம், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் கிரிபேஷ் (24) மற்றும் சரத் லால் (29) ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  அடையாளம் தெரியாத அந்த நபர்கள் காரில் சென்று இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.


இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே இருவர் கொலைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குண்டர்கள் தான் காரணம் என இளைஞர் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.




https://twitter.com/IYC/status/1097460701818380288?s=19




https://twitter.com/TN_PYC/status/1097458351015743495?s=19


இந்த கொலையை கண்டித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி காசர்கோடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியது. 




https://twitter.com/IYC/status/1097459777968304128?s=19


இந்த நிலையில், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- “கசார்கோடு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இருவர் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொலைகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். 




https://twitter.com/RahulGandhi/status/1097334689482883072?s=19

Similar News