தி.மு.க. எம்.எல்.ஏ இதயவர்மன் கைது விவகாரத்தில் சொல்லி அடித்த எஸ்.பி கண்ணன்.! #DMK #MLA #ShootingCase
தி.மு.க. எம்.எல்.ஏ இதயவர்மன் கைது விவகாரத்தில் சொல்லி அடித்த எஸ்.பி கண்ணன்.! #DMK #MLA #ShootingCase
கள்ளதுப்பாக்கி வைத்து நிலத்தகராறில் துப்பாக்கி சூடு நடத்திய திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த வழக்கு தொரட்பாக எம்எல்ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று மாவட்ட எஸ்பி கண்ணன் இன்று காலை கூறினார், இதனை தொடர்ந்து கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது எம்.எல்.ஏ மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றும் எஸ்.பி கண்ணன் கூறினார்.
அவர் கூறிய 5 மணி நேரத்துக்குள்ளேயே திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.