பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர் பிரதமரின் நிவாரன நிதிக்கு தனது இரண்டு வருட சம்பளத்தை ஒதுக்கியுள்ளார்..

பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர் பிரதமரின் நிவாரன நிதிக்கு தனது இரண்டு வருட சம்பளத்தை ஒதுக்கியுள்ளார்..

Update: 2020-04-04 09:05 GMT

எல்லா வற்றுக்கும் மனம் விசாலமாகவும் பிறர் துன்பத்தை நமது துன்பமாக கருதும் மனம் இருந்தால் போதும் அவ்வாறு நல்ல மனம் கொண்டவர்  தான் பாஜக எம்பி கவுதம்கம்பீர்  பிரதமரின் நிவாரன நிதிக்கு தனது இரண்டு வருடசம்பளத்தை ஒதுக்கியுள்ளார் 

இதுகுறித்து கவுதம் கம்பிர் தனது டுவிட்டர் பக்கத்தில் ''மக்கள் தங்களுடைய நாடு அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உங்களுடைய நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? என்பதுதான் உண்மையான கேள்வி.

நான் என்னுடைய இரண்டு வருடத்திற்கான எம்.பி. சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் முன்வர வேண்டும்!'' எனத் தெரிவித்துள்ளார்.

Similar News