பிரதமரின் ஜன் தன் யோஜ்னா கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு தலா ரூ.500 தொகையை 2020 ஏப்ரல் மாதத்துக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது - மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதமரின் ஜன் தன் யோஜ்னா கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு தலா ரூ.500 தொகையை 2020 ஏப்ரல் மாதத்துக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது - மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ் பெண்கள் தொடங்கியுள்ள வங்கிக் கணக்குகளில் (வங்கிகள் தெரிவித்துள்ள அந்தக் கணக்குகளில்) தலா ரூ.500 தொகையை 2020 ஏப்ரல் மாதத்துக்கு நேரடியாகச் செலுத்தியுள்ளது. அந்தந்தக் கணக்குகளில் 2020 ஏப்ரல் 2 ஆம் தேதியன்று இந்தத் தொகை செலுத்தப்பட்டது.
பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்புத் திட்டத்தின் கீழ், பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.500 கருணைத் தொகையாகசெலுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் 26.03.2020 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி இந்தத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
பயனாளர்கள் சமூக இடைவெளியைப் பராமரிக்கவும், பணம் எடுப்பதில் ஒழுங்குமுறையை கடைபிடிக்கவும், பணம் எடுக்க வரும் பயனாளிகள் வங்கிக் கிளைகள், பட்டுவாடா மையங்கள், ஏ.டி.எம்.களுக்கு வருவதை நேர அவகாசத்துக்கு ஏற்ப பிரித்து முறைப்படுத்த வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களுக்கு நிதிச் சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கிக் கணக்கு எண்ணில் கடைசி எண் அடிப்படையில், அவர்கள் பணம் எடுப்பதற்கான தேதி பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் பின்வருமாறு முடியும் ஜன் தன் திட்ட பெண் வாடிக்கையாளர்கள் பயனாளிகள் பணம் எடுப்பதற்கான தேதி
0 அல்லது 1 3.4.2020
2 அல்லது 3 4.4.2020
4 அல்லது 5 7.4.2020
6 அல்லது 7 8.4.2020