பிரியங்காவின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!
பிரியங்காவின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!
தெலங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்டது சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி,பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இத்தகைய செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்து 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த வருகின்றனர்.
இந்நிலையில் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்காவின் வீட்டுக்கு சென்ற பிரியங்காவின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்,அங்கிருந்த பிரியங்காவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.