ஆளுநருக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய கும்பல் இன்று சித்தராமையா குறித்து மௌனம் காப்பது ஏன்? : H. ராஜா சரமாரி கேள்வி

ஆளுநருக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய கும்பல் இன்று சித்தராமையா குறித்து மௌனம் காப்பது ஏன்? : H. ராஜா சரமாரி கேள்வி

Update: 2019-01-28 19:00 GMT
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா பெண்ணின் துப்பட்டாவை இழுத்து தவறாக நடந்துகொண்டுள்ளார்.
மைசூரு மாவட்டத்தில் வரனா தொகுதியில் நடந்த கூட்டத்தின் போது, ஜமீலா என்ற பெண்மணி மக்களின் குறைகளை கூறியுள்ளார். அவரை பேச விடாமல் தடுக்க முயன்றார் சித்தராமையா. அதை மீறி அந்த பெண்மணி பேசியதால் அவரின் துப்பட்டாவை இழுத்து தவறாக நடந்துகொண்டுள்ளார். மேலும் அவரை திட்டி, மிரட்டி பேச விடாமல் தடுத்து அவரை அமர செய்துவிட்டார்.
https://twitter.com/ANI/status/1089837251553460229?s=19
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க தேசிய செயலாளரும் ஹிந்து கோவில்கள் மீட்பு இயக்கத்தின் தலைவருமான திரு H. ராஜா அவர்கள், "அன்று தமிழக மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய கும்பல் இன்று பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்த சித்தராமையா குறித்து மௌனம் காப்பது ஏன்?", என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
https://twitter.com/HRajaBJP/status/1089921652438097920?s=19
 

Similar News