ஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய சுகிசிவம் : போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் கைது

ஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய சுகிசிவம் : போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் கைது

Update: 2019-08-04 13:26 GMT

ஆன்மீக பேச்சாளரான திரு சுகி சிவம் அவர்கள் முருகப்பெருமானும் சுப்ரமணியரும் வேறு வேறு தெய்வங்கள் என்ற தோணியில் பேசியுள்ளார். இந்த உண்மைக்கு புறம்பான கருத்துக்கு தகுந்த ஆதாரங்களுடன் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.


அந்த நிலையில், அத்தி வரதரை கொச்சைப்படுத்தி திரு சுகிசிவம் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதனால் ஹிந்து மத உணர்வாளர்கள் பலரும் கொதிப்படைந்தனர். இணையத்தில் பலரும் சுகி சிவமை கண்டித்து பதிவிட்டு வந்தனர்.


சுகி சிவம் யாரின் தூண்டுதலின் பேரில் ஹிந்து மதத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், மதுரை முத்தையா மன்றத்தில் சுகிசிவம் அவர்களை பேச அனுமதித்ததை கண்டித்து இந்து முன்னணி போராட்டம் செய்ய போவதாக அறிவித்திருந்தது.


அதனை தொடர்ந்து, இந்து முன்னணியினர் இன்று மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.




https://twitter.com/hmrss1980/status/1157934515471314944?s=19

Similar News