எத்தனையோ இடைஞ்சல்கள் கொடுத்தோம்! அத்தனையும் தாண்டி ஈ.பி.எஸ் - ஒ.பி.எஸ். ஜெயித்துவிட்டனர்: தங்க தமிழ்ச்செல்வன் !!

எத்தனையோ இடைஞ்சல்கள் கொடுத்தோம்! அத்தனையும் தாண்டி ஈ.பி.எஸ் - ஒ.பி.எஸ். ஜெயித்துவிட்டனர்: தங்க தமிழ்ச்செல்வன் !!

Update: 2019-06-27 12:38 GMT

அமமுகவில், டிடிவி தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமமுக நிர்வாகியிடம் தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் பற்றி தரக்குறைவாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 


இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய யாரும் முட்டுக்கட்டை போட மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றுக்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், ‘தேர்தல் வியூகத்தை வகுப்பதில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஜெயித்து விட்டார்கள். மக்கள் முடிவுகளைக் கொடுத்து விட்டார்களே.. ஆனால் தொண்டர்களை வழிநடத்துவதில் அவர்கள் இருவருக்கும் ஆதரவு இருக்கிறதா என தெரியவில்லை.


அதிமுக அரசின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எல்லா கட்சிகளும் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். பல இடைஞ்சல்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது. எந்த முயற்சி எடுத்தாலும் தோல்வியில் முடிகிறதே?அப்படியென்றால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஜெயித்து விட்டார்கள் என்று தானே அர்த்தம்’ என கூறியுள்ளார்.


Similar News