பாகிஸ்தான், வங்கதேசத்தினருக்கு இனிப்புகள் வழங்கிய இந்திய வீரர்கள்.!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

Update: 2021-07-21 09:40 GMT

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து, இனிப்புகளை வழங்கினர். 


அதே போன்று பஞ்சாப் மாநிலம், அடாரி, வாகா எல்லையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீர்களுக்கு இனிப்புகள் வழங்கி பக்ரீத் வாழ்த்துக்ளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், இந்திய வங்கதேச எல்லையில் உள்ள வீரர்களுக்கு, இந்திய வீரர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Similar News