இலங்கை கொண்டு செல்ல முயன்ற ரூ.26,000 கோடி விவகாரம்.! அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நிறுவனத்திடமிருந்து ஓமன் நிறுவனம் ஓட்டம் பிடித்தது ஏன் ?
இலங்கை கொண்டு செல்ல முயன்ற ரூ.26,000 கோடி விவகாரம்.! அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நிறுவனத்திடமிருந்து ஓமன் நிறுவனம் ஓட்டம் பிடித்தது ஏன் ?
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான சிங்கப்பூர் நிறுவனம் மூலமாக இலங்கை யில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் ரூ.26,000 கோடி (385 கோடி டாலர்) முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த விஷயத்தில் உடன் பங்குதாரராக இணைய முயன்ற ஓமன் நிறுவனம் ஒரே நாளில் இந்த திட்டத்திலிருந்து விலகி ஓடி விட்டது ஏன் என்பது குறித்தும், இவ்வளவு மிகப்பெரிய தொகைக்கு அதிபதியாக இவர்களால் எப்படி முடிந்தது எனவும் பல தகவல்கள் வந்துள்ளன.
சில்வர் பார்க் இண்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் (தோராயமாக ரூ.26000 கோடி) அளவுக்கு முதலீடு செய்ய இருப்பதாக இலங்கை முதலீட்டு வாரியம் அண்மையில் அறிவிததது. இந்த நிறுவனம் சிங்கப்பூர் தேசிய ஒழுங்குமுறை கணக்கு மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப் பட்டுள்ள நிறுவனம் ஆகும்.
அதன் இயக்குநர்களாக சென்னையைச் சேர்ந்த ஜெகத் ரட்சகன் நிஷா, ஜெகத்ரட்சகன் சந்தீப் ஆனந்த், ஜெகத்ரட்சகன் அனுசுயா உள்ளிட்டோர் இருப்பதாக பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது. இயக்குநர்களில் ஒருவரான சந்தீப் ஆனந்த் முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக வேட் பாளருமான ஜெகத்ரட்சகனின் மகன், நிஷா அவரது மகள், அனுசுயா அவரது மனைவி ஆவார்.
இந்த மூவரையும் இயக்குநர்களாகக் கொண்ட சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண் ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் முதலீடு செய்ய இருப்பதாகவும், இந்த வர்த்தக திட்டத்தில் 70 சதவீத நிதியை சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம் முதலீடு செய்யும் என்றும் எஞ்சிய தொகையான 2000 மில்லியன் டாலர் நிதியை அந்நிறுவனம் கடன் மூலமாக திரட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்த நிலையில், ‘‘சிங்கப்பூர் நிறுவனத்தின் இந்திய வர்த்தக தொடர்புகள் குறித்து எங்களுக்கு தெரியும். இதுதொடர்பான ஆவணங்களில் ஜெகத்ரட்சகன் என்பவர் கையெழுத் திட்டுள்ளார்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.