உத்திர பிரதேசத்தில் இந்து மகா சபை தலைவரை ஆடு அறுப்பது போல அறுத்து கொடூர கொலை!

உத்திர பிரதேசத்தில் இந்து மகா சபை தலைவரை ஆடு அறுப்பது போல அறுத்து கொடூர கொலை!

Update: 2019-10-19 03:49 GMT

இந்து சமாஜ் கட்சியின் தலைவரும், இந்து மகாசபாவின் முன்னாள் தலைவருமான கமலேஷ் திவாரி லக்னோவில் நேற்று வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் கொடூரமான முறையில் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு, அதன் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் பிஜ்னூர் ஜமா மஸ்ஜித் இமாமான மவுலானா அன்வருல் ஹக் உட்பட 3 பேர் உள்ளதாக கமலேஷ் திவாரியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.


இந்த நிலையில் கொலை நடந்த சம்பவத்துக்கு சற்று முன்பாக வீடு நோக்கி வந்து கொண்டிருந்த கமலேஷ் திவாரியின் பின் பக்கம் 2 பேரும், ஒரு பெண்ணும் சந்தேகத்துக்கிடமாக வருவதும், அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஸ்வீட் கடையில் வாங்கிய இனிப்பு பெட்டி ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் அடங்கிய மஞ்சள் நிற பையை கையில் எடுத்து வருவதும்  à®…ங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.


கொலைகாரரால் ஆயுதங்கள் எடுத்து வந்த à®®à®žà¯à®šà®³à¯ பை à®•à®®à®²à¯‡à®·à¯ திவாரியின் வீட்டில் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே உள்ள மேசையில் கிடந்ததையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். 


கமலேஷ் திவாரி, சில ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாமியர்கள் வணங்கும் நபிகள் நாயகம் பற்றி குறையாக பேசி இருந்தார் என்று கூறப்படுகிறது. இதற்காக, அங்குள்ள இஸ்லாமிய அமைப்பு அவருடைய தலையை துண்டிக்க ரூ.51 இலட்சததை சன்மானமாக அறிவித்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கில் கமலேஷ் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். தற்போது அந்த வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் கொடூரத்தாக்குதலுக்கு இரையானார். 


கொலையாளர்கள் அவரது வீட்டுக்குள் விருந்தினர் போல நுழைந்ததும், கமலேஷ் திவாரி அளித்த தேநீரை அருந்தியுள்ளனர். தேநீர் அருந்திய அடுத்த கணம் கத்தியை எடுத்து ஆடு அறுப்பதுபோல திவாரியின் கழுத்தை முதலில் அறுத்து, பிறகு அவர் உயிர் தப்பிக்கக் கூடாது என எண்ணி அதன் பிறகு துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர்.  à®‡à®¨à¯à®¤ சம்பவம் உத்திர பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.


Similar News