கொரோனாவால் தனது குழந்தையிடம் நெருங்க முடியாமல் தவித்த தாய், கண்ணீர் விட்டு அழுத குழந்தை!

கொரோனாவால் தனது குழந்தையிடம் நெருங்க முடியாமல் தவித்த தாய், கண்ணீர் விட்டு அழுத குழந்தை!

Update: 2020-04-09 08:19 GMT

கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியை சார்ந்தவர் சுகந்தா , இவர் பெல்காம் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். இந்த மருத்துவமனையில் தான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே கர்நாடக மாநில சுகாதாரத் துறை அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களை வீட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, பிரத்தியேகமாக ஒரு இடத்தில் தங்க பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் செவிலியர் சுகந்தாவின் 3 வயது மகள், தாயை 15 நாட்களாக பார்க்க முடியாததால் அழுதுள்ளார், இதைத்தொடர்ந்து சுகந்தா தங்கியிருந்த இடத்திற்கு குழந்தையை அழைத்து வந்துள்ளார் அவரது கணவர், அப்போது அந்தக் குழந்தை "அம்மா வா" என்று கதறி அழுதது காண்போர் மனதை உருக்குவதாக இருந்தது. மேலும் அந்தக் குழந்தையை தூக்கி கொஞ்ச முடியாமல் தாய் கண்ணீர் விட்டு அழுதது பார்ப்போரின் கண்கலங்க வைத்துள்ளது. 

https://m.facebook.com/story.php?story_fbid=2826537457460553&id=100003129791911


Similar News