20 க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்த மதரஸா ஆசிரியர்- மதராசாவை மூட நடவடிக்கை !!

20 க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்த மதரஸா ஆசிரியர்- மதராசாவை மூட நடவடிக்கை !!

Update: 2019-06-02 11:18 GMT

கோட்டயம் பகுதியில் இஸ்லாமிய மதரசா இயங்கி வருகிறது. இதில் பயில வரும் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதரசா ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த மதரசாவை மூடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோட்டையம் பகுதியில் இஸ்லாமிய மதரசாவில் யூசூப் 63 என்பவர் கடந்த 38 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இங்கு பாட அறைக்கு அழைத்து மாணவ, மாணவிகளிடம் தவறாக நடந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.


இதனையடுத்து தலையோல பறம்பு போலீசார் மதரஸா ஆசிரியரை கைது செய்தனர். கடந்த பல ஆண்டுகளாக ஏறக்குறைய 20க்கும் மேற்பட்டோரை பலாத்காரம் செய்ததாக போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


Similar News