விஜய் பிறந்த நாளில் 'மாஸ்டர்', பரபரப்பு தகவல்கள்.!
விஜய் பிறந்த நாளில் 'மாஸ்டர்', பரபரப்பு தகவல்கள்.!
ஏப்ரல் 9ம் தேதி 'மாஸ்டர்' படம் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கரோனோ அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ஏமாற்றத்திலிருக்கும் விஜய் ரசிகர்கள் ஏப்ரல் 9ம் தேதியன்று 'மாஸ்டர்' ஹேஷ்டேகை பகிர்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். தற்போது ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் படங்கள் வெளியாவதில் மேலும் தாமதமாகும் என்றைய நிலையே நீடிக்கிறது.
இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான லலித், விஜயிடம் பட வெளியீடு குறித்து விவாதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி 'மாஸ்டர்' படத்தை வெளியிடலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கேரளா, கர்னாடாகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தமிழ்ப் படங்களுக்கென்று பெரிய சந்தையிருக்கும் வெளிநாடுகளிலும் நிலைமை சரியானால் மட்டுமே படத்தினை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்குள் கரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.