அன்றே செங்கோலை ஜெயலலிதாவிற்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் சேர்ந்தே கொடுத்த எம்.ஜி.ஆர்.!

அன்றே செங்கோலை ஜெயலலிதாவிற்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் சேர்ந்தே கொடுத்த எம்.ஜி.ஆர்.!

Update: 2019-09-23 12:59 GMT

ஒரு சிலர் சாதரணமாக ஒன்று செய்வது, பிற்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்குவதன் அறிகுறியாக இருக்கும். அந்த வகையில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர், முதல்வர் எடப்பாடி விசயத்தில் செய்த ஒன்று தீர்க்க தரிசனமாகியுள்ளது.


அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட விழாவில் தன் கையில் இருந்த செங்கோலை எம்.ஜி.ஆரிடம் தருகிறார் ஜெயலலிதா. அப்போது தனக்கு பின்னால் இருந்த இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து செங்கோல் பிடிக்க சொல்கிறார் எம்.ஜி.ஆர்.


இந்த நிகழ்வு அப்போது தற்செயலாக நடந்தது போல அப்போது தெரிந்தாலும், காலத்தின் வேகமான ஓட்டத்தில் அதன் காரணம் இப்போது புலனாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி எம்.ஜி.ஆர் ஒரு தீர்க்கதரசி என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.




https://www.facebook.com/100008390149445/videos/2444274112528903/

Similar News