உலகின் மதிக்கத்தகுந்த மனிதர் மோடிதான் !! இங்கிலாந்து நாட்டு ஆய்வில் தகவல் : பியூஷ் கோயல் பெருமிதம்!!
உலகின் மதிக்கத்தகுந்த மனிதர் மோடிதான் !! இங்கிலாந்து நாட்டு ஆய்வில் தகவல் : பியூஷ் கோயல் பெருமிதம்!!
இந்தியாவில் பிரதமர் மோடி 2019ம் ஆண்டில் மிகவும் மதிக்கத்தக்க மனிதராக செல்வாக்கு பெற்றுள்ளார். உலக அளவில் கடந்த ஆண்டு எட்டாம் இடத்தில் இருந்த மோடி இந்த ஆண்டு ஆறாவது இடத்தில் இருப்பதாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. YouGov. என்ற சந்தையை ஆய்வு செய்யும் நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பின் டாப் பட்டியலில் இடம் பெற்ற இந்தியர்களில் ஆடவரில் மோடியும், மகளிரில் மேரி கோமும் இடம் பெற்றுள்ளனர்.இது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இத்தகைய செயலாற்றல் மிக்க தலைவரின் கீழ் பணிபுரிவதை மிகவும் பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மோடியின் தன்னிகரற்ற தலைமைக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.