ஒரு மாத குழந்தையுடன் பணியாற்றும் நகராட்சி ஆணையர், கண்கலங்க வைக்கும் சம்பவம்

ஒரு மாத குழந்தையுடன் பணியாற்றும் நகராட்சி ஆணையர், கண்கலங்க வைக்கும் சம்பவம்

Update: 2020-04-12 05:06 GMT

விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் விடுமுறை எடுக்காமல் கொரோனா தடுப்பு பணி செய்துவருகிறார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையராக ஸ்ரீஜனாகும்மலா என்பவர் பணியாற்றி வருகிறார் இவருக்கு கடந்த மாதம் பிறந்த பெண் குழந்தையுடன் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்

நேர்மையான குடிமைப்பணி அதிகாரியாக உள்ளார் இவர் 2013 ஆண்டு குடிமைப்ணிக்கு தேர்வானவர் ஆவார். கொரோனா நோய் தடுப்பு பணிகளை இரவு பகல் பாராமல் பணியாற்றி எல்லோரின் நன்மதிப்பை பெற்றுள்ளார் விடுமுறை எடுக்காமல் அனைத்து பணிகளையும் தொய்வின்றி செய்து வருகிறார்

ஒருமாத கை குழந்தையுடன் அலுவலகத்தில் பணியாற்றும் படம் இனையத்தில் வெளியாகி பகிரபடுகிறது

Similar News