“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், எல்லோரையும் சிறையில் தள்ளுவோம் என்று சீறிய ப.சிதம்பரம் இன்று தலைமறைவு” - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!!

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், எல்லோரையும் சிறையில் தள்ளுவோம் என்று சீறிய ப.சிதம்பரம் இன்று தலைமறைவு” - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!!

Update: 2019-08-21 09:48 GMT


அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


ப.சிதம்பரம் வழக்கில் நீதிமன்றம் கடுமையாக தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது. எல்லா வகையிலும் இதற்கு மூளையாக ப.சிதம்பரம் செயல்பட்டுள்ளதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 


அதன் அடிப்படையில் சிபிஐ நடவடிக்கையை எடுத்து வருகிறது. எந்த வழக்காக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள வேண்டும். ஓடி ஒளிவதால் பயன் இல்லை. அதனை எதிர்கொள்வதுதான் நல்ல விஷயம். ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.


 மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம், எல்லோரையும் சிறையில் தள்ளுவோம் என்று ப.சிதம்பரம் சீறினார். 


ஆனால், அப்படி சொன்னவருக்கே இப்படியொரு நிலைமை வந்தது பரிதாபத்துக்குரியது. அவர் குற்றம் இழைத்தாரா? இல்லையா என்பது குறித்து சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து, தலைமறைவாவது, அவ்வளவு பெரிய பொறுப்புக்கு அழகல்ல.


இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.


Similar News