பராசக்தி – படம், கருணாநிதியின் சொந்த கதை இல்லை! இதோ அதன் மூலப்பத்திர வீடியோ ஆதாரம்!
பராசக்தி – படம், கருணாநிதியின் சொந்த கதை இல்லை! இதோ அதன் மூலப்பத்திர வீடியோ ஆதாரம்!
திமுகவின் பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்ற உண்மை இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கான விசாரணை தேசிய பட்டியலின ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த இடம் பஞ்சமி நிலம்தான் என்பதற்கான ஆதாரங்களை மூத்த தலித் தலைவரும், பாஜக செயற்குழு உறுப்பினருமான தடா பெரியசாமி வெளியிட்டுள்ளார். அது தொடர்பான பல ஆதார ங்களையும் அவர், தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்.
ஆனால் முரசொலி நில மூலப்பத்திரத்தை வெளியிடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழக மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் அவரால் முரசொலி மூலப்பத்திரத்தை வெளியிட முடியவில்லை. அவரிடம் அதற்கான மூலப்பத்திரம் இல்லை என்று உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனால்தான் திமுக சார்பில் தேசிய பட்டியல் இன ஆணையத்தில் ஆஜரான ஆர்.எஸ்.பாரதி, இதனை விசாரிக்க தேசிய பட்டியலின ஆணையத்திற்கு உரிமை இல்லை என்றும், அந்த ஆணையத்தையே மிரட்டும் வேலையிலும் ஈடுபட்டார். முரசொலி மூலப்பத்திர பிரச்சனையை கிளப்பிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், பாஜக பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தடா பெரியசாமி ஆகியோர்களை, 48 மணி நேரத்திற்குள்ளாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரட்டினார்கள். ஆனால் பல 48 மணி நேரங்கள் கடந்த பிறகும், இதுவரை கோர்ட்டில் திமுக வழக்கு தொடர வில்லை.