ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டமாக மசூதிக்கு படையெடுப்பு - சொல்றத கேட்கமாட்டேங்கறாங்களே என புலம்பும் பாக் பிரதமர் இம்ரான் கான்!
ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டமாக மசூதிக்கு படையெடுப்பு - சொல்றத கேட்கமாட்டேங்கறாங்களே என புலம்பும் பாக் பிரதமர் இம்ரான் கான்!
பாகிஸ்தானில் பஞ்சாப், சிந்து மாகாணம் போன்ற இடங்களில் இருந்து வந்த செய்திகளின்படி மத குருக்கள்கள் கொரோனாவை வீழ்த்த அல்லா ஒருவரே வலிமையானவர் எனவும் எனவே வயதில் பெரியவர்களும், நோயாளிகள் மட்டும் மசூதிகளுக்கு வந்து தொழுகை நடத்துமாறும், மற்றவர்கள் வீட்டில் இருந்தே நமாஸ் செய்யுமாறும் சென்ற வார இறுதியில் கூறினர். ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பீதி பாகிஸ்தான் உட்பட உலகெங்கும் அதிகரித்துள்ளதை அடுத்து படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள் அனைவரும் மசூதிக்கு கூட்டம் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.
இதனால் அங்குள்ள, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. பல கட்டுப்பாடுகளை விடுத்தும் மக்கள் மசூதிகளுக்கு செல்வதை கட்டுப்படுத்த முடியவில்லை என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் அரசு ஊரடங்கு பிறப்பித்திருந்தும் மக்கள் கேட்கவில்லை என்றும் ஏராளமான மக்கள் சட்டத்தை மீறுவதால் அவர்களை தண்டிக்க முடியவில்லை என்றும் போலீசார் கூறி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
சில மத குருக்கள்கள் மசூதிகளில் நடைபெறும் தொழுகைகளில் கலந்து கொள்ள மக்களை ஊக்குவிப்பதாகவும், கொரோனா பயத்தால் மக்கள் அல்லாவிடம் உதவி பெற ஓன்று கூடுவதாகவும் செல்வதாக இஸ்லாமாபாத்தில் ஒருவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
நாட்டின் பெரும்பகுதி ஊரடங்கின் கீழ் இருப்பதாக அறியப்பட்டாலும், பல மசூதிகள் பாகிஸ்தான் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன, குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று அனைத்து மசூதிகளும் திறந்து வைத்து கூட்டம் கூட்டமாக பலர் தொழுகை நடத்தியதாக பலர் கூறினர். .