வீர மரணமடைந்த CRPF வீரர்களின் உடலுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமைச்சர்கள், தளபதிகள் நேரில் அஞ்சலி! #PulwamaAttack

வீர மரணமடைந்த CRPF வீரர்களின் உடலுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமைச்சர்கள், தளபதிகள் நேரில் அஞ்சலி! #PulwamaAttack

Update: 2019-02-16 03:00 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த CRPF வீரர்களின் உடலுக்கு டெல்லியில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர். மேலும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ராஜ்யவர்தன் ரத்தோர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.




https://twitter.com/PMOIndia/status/1096448026904748032


காஷ்மீர் மாநிலம் புல்மாமாவில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 41 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உடல் சிதறி கோரமாக பலியாயினர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் பலியாகியுள்ளனர். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த CRPF வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன. CRPF வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி, மற்றும் தலைவர்கள், தளபதிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். வீரர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.


Similar News