தேனியை தெறிக்கவிட்ட - பிரதமர் மோடி நாளை நமதே நாற்பதும் நமதே! லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பேச்சு!
தேனியை தெறிக்கவிட்ட - பிரதமர் மோடி நாளை நமதே நாற்பதும் நமதே! லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பேச்சு!
தேனி ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது :
நாளை தொடங்குகிற தமிழ் புத்தாண்டிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நாளை பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த தினம். இந்த மைதானத்தில் வெப்பமும் அதிகமாக உள்ளது. உங்கள் உற்சாகமும் அதிகமாக உள்ளது.
நான் ஹெலிகாப்டரில் வரும்போது மைதானத்தில் கூடியிருக்கும் மக்களை கண்டேன், சாலை எங்கும் இருக்கும் மக்களை கண்டேன். நாளை நமதே நாற்பதும் நமதே.
ஜாலியன் வாலியாபாக் படுகொலையில் உயிர் இழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துறோம்.
ஒவ்வொருவரும் வளத்துடனும் கண்ணியத்துடன் வாழ நாம் புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். ‘புதிய இந்தியா’ என்ற கனவில் அதன் திசை நோக்கி செல்கிறோம்.
காங்கிரசும் , திமுகவும் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்.
ஊழலுக்கு ஆதரவாக மோடிக்கு எதிராக காங்கிரஸ் திமுக ஒன்று சேர்ந்து இருக்கிறது.
திமுக தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக அறிவித்தார். ஆனால் மக்கள் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை. அந்த கூட்டணியில் உள்ள யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்கள் தாங்கள் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர். பாஜக ஆட்சியில் நாடு அடைந்து வரும் வளர்ச்சியை காங்கிரஸ், திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு செய்தது அநியாயமும், அநீதியும்தான்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஏழைகளுக்காக வாழ்ந்தார்கள், மக்கள் நலத்திட்டங்களை தந்தார்கள். ஏழைகளுக்காக வாழ்ந்த அந்த இருபெரும் தலைவர்களால் தேசம் பெருமை கொள்கிறது.
மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டு உள்ளது. உங்கள் காவலாளியாகிய நான் உஷாராக இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் என்ன திருட்டுதனம் செய்தாலும் நான் கண்டுபிடித்து விடுவேன். நாட்டு மக்களை யாரும் முட்டாளாக்க விடாமல் நான் காவலாளியாக இருக்கிறேன்.