தமிழக பாஜக சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழக பாஜக சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Update: 2019-04-14 06:21 GMT


தமிழ் புத்தாண்டு சித்திரை-1 இச்சித்திரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க முத்திரையாய் மத்தியில் மோடி ஆட்சி செய்கிறார்….


நேரடி மானியம் மூலம் அனைவரின் வீட்டிலும் கேஸ் தங்கவும், பால் பொங்கவும், வழி வகுத்திருக்கிறார். விவசாயிகளுக்கு காப்பீடு அளித்து அவர்களை பாதுகாத்திருக்கிறார். செல்வமகள் சேமிப்புத் திட்டம் என பெண் குழந்தைகளை கொண்டாடி இருக்கிறார். அதே நல்லாட்சி தமிழகத்திலும் மலரவேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் நல்லாட்சியின் நன்மைகளை உணர வேண்டும். அதற்கு இப்புத்தாண்டு வழிவகுக்கட்டும்.


தமிழன் தலை நிமிர்ந்திருக்கவும், யாரையும் சாராத உன்னத வாழ்க்கையை அடைந்திடவும் இப்புத்தாண்டு வழி வகுக்கட்டும்.


வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளிகூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். இந்திய தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கை தமிழர்களுக்கும் அதிகாரம் கிடைக்கட்டும்.


14.04.2019 அன்று அண்ணல் அம்பேத்கார் அவர்களது 129வது பிறந்த நாளை நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் நாட்டு மக்களையும் பா.ஜ.க வினரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.


சமுதாயத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளைக் கடுமையாகச் சாடிய அண்ணல் அம்பேத்கார், தீண்டாமையை எதிர்த்துப் போராடினார்.


 தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முன்னேற்றத்திற்குப் போராடிய அவர், அவர்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி போன்றவைகளில் இட ஒதுக்கீடு அவசியம் என்று அனைவரையும் உணர வைத்து தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு அடிகோலினார்.
அவரது 129வது பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர். அவரது புகழ் ஓங்குகää அவர் காட்டிய வழியில் சமதர்ம சமுதாயத்திற்கு பாடுபடுவோம் என்று அவரது பிறந்த நாளில் சபத மேற்போம் என தமிழக பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை சவுந்தர் ராஜன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



Similar News