இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு.! #PMModi #IndianIndustrial
இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு.! #PMModi #IndianIndustrial
'இந்திய குளோபல் வாரம்-2020' என்ற பெயரில் 3 நாள் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 30 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து காணொலி காட்சி மூலம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பெருந்தொற்று நோயான கொரோனாவுக்கு எதிராக இந்தியா தீவிரமாக போராடிக் கொண்டு இருக்கிறது. மக்களின் சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்தியா தனக்கு ஏற்படும் சவால்களை, அது சமூக ரீதியிலான சவால்களாக இருந்தாலும் அல்லது பொருளாதார சவால்களாக இருந்தாலும் அவற்றை வென்று சாதனை படைத்து இருப்பதை வரலாறு காட்டுகிறது.
இந்தியர்கள் இயற்கையிலேயே சீர்திருத்தவாதிகள். இந்தியா எப்போதும் தன்னை புதுப்பித்துக் கொண்டு வளர்கிறது. முடியாது என்று சொல்லப்படுவதை சாதித்து காட்டும் உத்வேகம் இந்தியர்களிடம் உள்ளது.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எங்களுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. அவை உலகத்துக்கு சொந்தமானவை என்றுதான் கருதுகிறோம். உலகில் உள்ள குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பு மருந்தில் மூன்றில் இரு பங்கை இந்தியா தயாரித்து வழங்குகிறது. மருந்துகளின் விலையை குறைப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் எங்களின் இந்த பங் களிப்பு முக்கியமாக உள்ளது.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்த விஷயத்தில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சர்வதேச அளவில் மேற்கொள்ளும் முயற்சிகளில் பங்கேற்று உள்ளன. மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் இந்தியா அதை அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்கும். இந்த உலகத்தின் நன்மைக்காகவும், வளத்துக்காகவும் தேவையான அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், 1979-ம் ஆண்டுக்கு பிறகு பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அதை சமாளிக்கும் வகையில் ரூ.20 லட்சத்து 97 ஆயிரம் கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை இந்திய அரசு அறிவித்து உள்ளது.