தமிழகத்தில் தொற்று எண்ணிக்கையை அறிவிப்பதில் கூட சிறுபான்மையினருக்கு சாதகமாக அரசியல்! கொந்தளிக்கும் குடிமகன்கள்.!
தமிழகத்தில் தொற்று எண்ணிக்கையை அறிவிப்பதில் கூட சிறுபான்மையினருக்கு சாதகமாக அரசியல்! கொந்தளிக்கும் குடிமகன்கள்.!
கடந்த 2 வாரங்களுக்கு முன்புவரை தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாகத்தான் இருந்தது. ஆனால் டெல்லியில் நடைபெற்ற தப்ளிகி ஜமாஅத் மாநாட்டுக்கு சென்றவர்கள் திரும்பிய பின்னர்தான் தொற்று பரவியதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு கூடிவிட்டது. அதுவும் தமிழகத்தில் மட்டும் மேற்கண்ட டெல்லி நிகழ்ச்சியில் தொடர்புடையவர்களால் ஏற்பட்டுள்ள தொற்றுக்களின் எண்ணிக்கை மொத்த தொற்றுக்களில் 90 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நேற்றைய முன்தினம் ஏப்ரல் 9 ம் தேதி மட்டும் தமிழகத்தில் புதிதாக அறியப்பட்ட தொற்றுக்களின் எண்ணிக்கை மொத்தம் 96 பேர். இதில் 84 பேர் தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்று வந்தவர்கள். ஆனால் தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் நேரடியாக அவ்வாறு குறிப்பிடாமல் "அந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களால்" ஏற்பட்ட புதிய தொற்று 84 என்று யாரோ கொடுக்கும் அழுத்தத்துக்கு உட்பட்டு தனது அறிக்கையை மிகவும் அடங்கி வாசிக்கிறார்.
ஆனால் இதே பீலா ராஜேஷ் தமிழக தொற்று நிலவரம் தொடர்பான தகவல்களை சில நாட்களுக்கு முன்பு பகிர்ந்து கொண்டபோது 'டெல்லி மாநாட்டு நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்கள்' என்றுதான் குறிப்பிட்டார். இதற்கு காரணம் ஒரு அரசியல் அழுத்தத்துக்கு உட்பட்டு தமிழக அரசு பீலா ராஜேஷை இவ்வாறு கூறுமாறு செய்திருக்கலாம் என்றும், என்றாலும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்தை பரப்பும் ஒரு காரியத்தை செய்த ஒரு அமைப்பின் பெயரை மூடி மறைப்பது உண்மையான மதசார்பற்ற தன்மையா எனவும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளதாக சில ஆங்கில பத்திரிகைகள் கேள்வி எழுப்பியுள்ளன.