திருவள்ளுவரை வைத்து ஓர் அரசியல் - அறமிழந்த தமிழக ஊடகவியலாளர்கள்!
திருவள்ளுவரை வைத்து ஓர் அரசியல் - அறமிழந்த தமிழக ஊடகவியலாளர்கள்!
வள்ளுவர் எல்லா படங்களிலும் சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பதால் அவர் சமணர் என்பதை தவிர அனைத்து வாதங்களையும்(ஆதாரமே இல்லாமல் தான்) நமது திராவிட கண்மணிகள் வைத்துவிட்டார்கள்.
சமீபத்திய விவாத போக்கை நீங்கள் கவனித்திருக்கக்கூடும்! நான் அதன் பின் உள்ள அரசியலை பேசுகிறேன். இக்கட்டுரையில்
மு.தெய்வநாயகம் என்பவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தமிழர்களின் கலாச்சாரத்தை கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு ஏற்ப திரித்து எழுதுவதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கருதித் தொண்டாற்றியவர்(!). அவர் திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என்று நிறுவி விட்டதாக நினைத்து ஒரு புத்தகம் எழுதினார். அதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
இந்த புத்தகத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் முன்னுரை எழுதியுள்ளார்(மேலும் இதுபற்றி விரிவாக அறிய அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் "உடையும் இந்தியா"நூலை வாசிக்கவும்)
நிற்க. இது பழைய கதை! இப்போது ஏன் இதை மீண்டும் சொல்ல வேண்டும்?
காரணம் திருவள்ளுவர் காவி உடை, திருநீறு பூசி இருப்பது போல் தமிழக பா.ஜ.க-வின் ட்விட்டர் கணக்கு ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்தது!
இதற்கு வந்த/வரும் எதிர்வினைகள் கொஞ்ச நஞ்சமல்ல. திருக்குறளின் எந்த ஒரு அதிகாரத்தையும்(குறைந்தது 5 குறள்களைக்கூட) பின்பிற்ற முயலாத, திருவள்ளுவரை கிறிஸ்தவர்கள் தங்கள் மதமாற்ற நோக்கத்துக்காக உபயோகப்படுத்த முயலுபவர்களை தடுக்க வழியில்லாத கூட்டம் இப்போது ஒப்பாரி வைத்து தங்கள் hypocrisy-ஐ வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறது. ஆனால், இப்போது பெரிதும் கொந்தளிப்பது தி.மு.க-வின் (un)official ஆதரவாளர்களான பத்திரிக்கையினர் தான். இவ்வளவு நாள் பா.ஜ.க வெறுப்பை மேல்பூச்சோடு பேசி வந்து மறைமுகமாக பேசி வந்த கூட்டம், அந்த ட்வீட் வெளிப்படுத்திய உண்மையை காண சகிக்காமல் எதையோ ட்ரெண்ட் பண்ணி அதில் திருப்தி கொள்கிறது.