காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு வீரர் சாவு என தகவல்! #PulwamaAttack

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு வீரர் சாவு என தகவல்! #PulwamaAttack

Update: 2019-02-15 12:40 GMT

ஜம்மு - காஷ்மீரில் மத்திய பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய கொடூரத் தாக்குதலில் 45  வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய மிக கொடூரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. 


தீவிரவாதிகள் நடத்திய இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 45 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை கண்டித்து, பல்வேறு அமைப்புகள்  மற்றும் அரசியல் கட்சியினர் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த கடும் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியம் பலியாகி உள்ளதாக ஏற்கனவே தெரிய வந்தது. 


 தற்போது தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒருவரும் குண்டு வெடிப்பில் பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. இவர் அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் என தெரிய வந்துள்ளது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறிஅழும் காட்சி மற்றும் இறந்த இராணுவ வீரர்களின் உடலை சவப்பெட்டிக்குள் வைத்து தேசியக் கொடி போற்றி இராணுவ வீரர்கள் வீர வணக்கம் செலுத்தும் காட்சி ஆகியவை நெஞ்சை உருக்குவதாக உள்ளன.


Similar News