பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டபடி அகல் விளக்குகளை ஏற்றுங்கள் - டாக்டர் ராமதாஸ்!

பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டபடி அகல் விளக்குகளை ஏற்றுங்கள் - டாக்டர் ராமதாஸ்!

Update: 2020-04-03 11:13 GMT

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் தனது செய்தியை வெளியிட்டார். அதில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை, 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து விட்டு, 9 நிமிடங்களுக்கு விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது செல்போன் டார்ச் லைட்டுகளை ஒளிர செய்து, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் தங்களின் பங்களிப்பும் உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் "பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டவாறு அகல் விளக்குகளை ஏற்றுங்கள்" என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டவாறு கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் உள்ளத்தால் ஒன்றுபட்டிருப்பதை காட்டவும், கொரோனா இருளைப் போக்கவும் ஞாயிறு இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின் விளக்குகளை அணைத்து விட்டு, அகல் விளக்குகளை ஏற்றுங்கள். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News