ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சர் ஆகிறார்!
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சர் ஆகிறார்!
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக - பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே எம்பியும் இவரே.
எனவே இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கு என்று எதிர்பார்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
இதற்கான முறையான தொலைபேசி அழைப்பு ரவீந்திரநாத் குமாருக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் டெல்லி சென்றுள்ளார். இன்று மாலை பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நிகழ்சியில் ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராக பதவி ஏற்கிறார்.