சாத்தான்குளம் சம்பவம் : 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கை.! #Sathankulam #Cybercrime

சாத்தான்குளம் சம்பவம் : 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கை.! #Sathankulam #Cybercrime

Update: 2020-06-30 03:11 GMT

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளையும், வதந்திகளையும், சம்பந்தமில்லாத வீடியோ' போன்றவற்றைசிலர் பரப்புவதாக வந்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கோள் ளப்பட்டது. விசாரணையில், சமூக வலைத்தளங்களில் சிலர் 'வீடியோ' ஒன்றை பதிவிட்டு, அதை சத்தான்குளத்தில் நடை பெற்ற சம்பவத்துடன் இணைத்து பரப்பி வருவது கண்டுபி டிக்கப்பட்டது. இந்த வீடியோ' குறித்து விசாரணை செய்யப் பட்டது. அது 2019-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே நடைபெற்ற தனிநபர்கள் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ' ஆகும். இந்த சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை சாத்தான்குளம் சம்பவத்துடன் தொடர் புப்படுத்தி விஷமிகள் சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வீடியோவை பதிவிட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தனிநபர்கள் சமூக வலைதள குழுக்களில் தவறான தகவல்கள், வதந்தியை பரப்புவோர்கள், பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

Similar News