மேயருடன் கொலையுண்ட வேலைக்கார பெண்ணிற்கு அஞ்சலி செலுத்தாத ஸ்டாலின்! “ஏழை என்பதால் வரவில்லை” என்று பொதுமக்கள் குமுறல்!!
மேயருடன் கொலையுண்ட வேலைக்கார பெண்ணிற்கு அஞ்சலி செலுத்தாத ஸ்டாலின்! “ஏழை என்பதால் வரவில்லை” என்று பொதுமக்கள் குமுறல்!!
நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி (62). தி.மு.க.வை சேர்ந்த உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் (72) நெடுஞ்சாலை துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர்களது வீடு நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரில் இருக்கிறது. அவர்களின் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் (37) என்பவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் (23 - ஆம்தேதி), முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வேலைகார பெண் மாரி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். வீட்டுக்குள் நுழைந்த மர்மக் கும்பல், மூவரையும் கம்பியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்ததுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உமா மகேஸ்வரி குடும்பத்தினரை நேரில் சந்தித்து துக்கம் விசாரித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகசங்கரன் ஆகியோரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் புறப்பட்டு சென்றுவிட்டார்.
ஆனால் இதே சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஏழையான வேலைக்காரப் பெண் மாரியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லக்கூட செல்லவில்லை.