முருகதாசுக்கு அதிர்ச்சியளித்த சன் பிக்சர்ஸ்!

முருகதாசுக்கு அதிர்ச்சியளித்த சன் பிக்சர்ஸ்!

Update: 2020-04-02 11:54 GMT

இயக்குனர் பாக்யராஜுக்கு பின்னர் இந்தி திரையுலகில் உச்சம் தொட்ட இயக்குனர் முருகதாஸ் மட்டுமே. துப்பாக்கி, கத்தி என தமிழில் அடுத்தடுத்து மெகா ஹிட் கொடுத்த முருகதாசுக்கு ஸ்பைடர், சர்கார், தர்பார் என அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இதனால் அவர் அடுத்து தெலுங்கில் இயக்கவிருந்த அல்லு அர்ஜுன் படமும் தள்ளி போக, வேறு வழி இல்லாமல் மீண்டும் விஜயிடம் தஞ்சம் அடைந்தார்.

விஜய்க்கும் முருகதாஸ் கூறிய கதை பிடித்து போக அவருக்கு தேதிகளை ஒதுக்கினார். சன் பிக்சர்ஸ் தான் தயாரிப்பாளர் என கூறியவர், முருகதாசை அவர்களை சந்திக்க சொன்னார். வணிக விஷயங்களில் எப்போதுமே கடுமையாக இருக்கும் சன் பிக்சர்ஸ், முருகதாசின் முந்தைய படங்களின் நிலையை சுட்டி காட்டி பட்ஜெட்டில் பெரிய பகுதியை குறைக்க கூறியிருக்கிறார்கள். மேலும் கடந்த படத்தில் 35 கோடி சம்பளம் வாங்கிய முருகதாசுக்கு இந்த படத்தில் 18 கோடி மட்டும் தான் தர முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதை சற்றும் எதிரபாராத முருதாஸ் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.

Similar News