கல்லூரி மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் வகுப்பெடுங்கள்..பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலை உத்தரவு..
கல்லூரி மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் வகுப்பெடுங்கள்..பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலை உத்தரவு..
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நிலையில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு அனைவரும் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான தனியார் ஐ.டி நிறுவன ஊழியர்கள் மற்றும் கார்பரேட் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரி மாணவர்களும், பலகலை பேராசிரியர்களும் வீட்டில் உள்ளனர். இந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆன்லைனில் பாடம் நடத்துமாறு கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.