பிரதமர் நரேந்திர மோடி குறித்து தமிழ் நடிகை தெரிவித்த பரபரப்பு கருத்து!!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து தமிழ் நடிகை தெரிவித்த பரபரப்பு கருத்து!!

Update: 2019-12-01 06:06 GMT

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா நேற்று  சென்னை வந்தார்,விமான நிலையத்தில் அக் கட்சியின் சார்பாக செயல் தலைவர் ஜே.பி. நட்டாக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது, பின்னர் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார், அப்போது 16 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட உள்ள பாஜக அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


பின்னர் மாநில நிர்வாகிகளுடன் கட்சியை வலுப்படுத்த ஆலோசனை மேற்கொண்டார்,அப்பொழுது பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா வை நடிகை நமீதா சந்தித்து தன்னை பாஜகவின் இணைத்துக் கொண்டார்.


பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகை நமீதா, எனக்கு தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை,மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆசீர்வாதத்தால் நான் பாஜகவில் உள்ளதாக கூறிய நமீதா,குழந்தைகளுக்கு கல்வி, பெண்கள் நலன், என மோடியின் நலத்திட்டங்கள் என்னை கவர்ந்தது,மூன்று வருடங்களாக நான் கவனித்து வருகிறேன் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி  நிறைய நல்ல விஷயங்கள் செய்துள்ளார் என்று கூறினார்.


Similar News