எங்கள் சமூகத்தை மட்டுமே குறி வைத்து தாக்குகிறார்கள் என புலம்புபவர்கள், இந்த 2 சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.!
எங்கள் சமூகத்தை மட்டுமே குறி வைத்து தாக்குகிறார்கள் என புலம்புபவர்கள், இந்த 2 சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.!
கொடுமையான கொரொனா வைரசின் பிடியில் சிக்கி முன்னேறிய நாடுகளில் கூட பலியானவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 லட்சத்தை நெருங்குகிறது. இந்த நிலையில் ஜனவரி 2 ம் வாரத்தில் இருந்தே இந்தியா உஷாராகிவிட்டதால் இந்தியாவில் இன்னும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு பகலாக போராடி வரும் நிலையில் டெல்லியில் தடையை மீறிய நடைபெற்ற ஒரு சமய மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் நிலைமை இன்னும் பீதியை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் சமய மாநாட்டை கூட்டியவர்களின் செயல் மன்னிக்க முடியாதது என பொறுப்புள்ள பல பிரபல பத்திரிக்கைகளே கருத்து தெரிவித்தன. அவர்கள் அதில் பங்கேற்ற அப்பாவிகளை குறை கூறவில்லை. நோய் தற்செயலாக அவர்களை அண்டிவிட்டது, என்றாலும் அவர்களில் சிலர் பொறுப்பற்ற முறையில் பரிசோதனைகளுக்கு உட்படாமல் முரண்டு பிடித்ததால் சமூக ஊடகங்களின் கண்டனத்துக்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சிலர் தங்கள் சமூகத்தை மட்டுமே குறி வைத்து தாக்குகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் புலம்பி வருகின்றனர். அவர்கள் கீழ்கண்ட 2 சம்பவங்களை தொடர்பு படுத்தி பார்த்தால் சில உண்மைகள் தெரிய வரும்.
சென்ற மார்ச் 22 ந்தேதி சுய ஊரடங்கு மேற்கொள்ளப்பட்ட நாளில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான மூத்த நடிகர் விசு வயது மூப்பாலும், உடல்நலமின்றியும் இயற்கையான வகையில் காலமானார். மிகப்பெரிய ஜாம்பவனானான அவருடைய இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் அரசின் கட்டுப்பாட்டுக்கேற்ப 20 க்கும் மேற்பட்டவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அந்த குறைந்த நபர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்தார்கள், இறுதி யாத்திரையும் அரசு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு மிக எளிமையாக நடைபெற்றது. காரணம் நம்மால் இந்த சமூகத்துக்கு எந்த தீமையும் உண்டாகிவிடக் கூடாது என பொறுப்புடன் ஒரு பெருங்கூட்டம் நடந்து காட்டியது.