"மிஸ் மிஸ் இவன் என்னை அடிச்சிட்டான், கிள்ளிட்டான்" : ட்விட்டரில் SG சூர்யாவிடம் வாங்கி கட்டிக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்!
"மிஸ் மிஸ் இவன் என்னை அடிச்சிட்டான், கிள்ளிட்டான்" : ட்விட்டரில் SG சூர்யாவிடம் வாங்கி கட்டிக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்!
சோனியா காந்தியின் மகளான பிரியங்கா வட்ராவுக்கு காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இடம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் உள்ள வாரிசு அரசியலை உலக பத்திரிக்கைகள் துவங்கி பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனை அடுத்து ட்விட்டரில் பா.ஜ.க இளைஞர் அணி துணை தலைவர் எஸ்.ஜி. சூர்யா-விற்கும் ஸ்டாலினின் மகன், கலைஞர் கருணாநிதியின் பேரன், மூன்றாம் கலைஞர் என்று அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலினுக்கும் வார்த்தை போர் மூண்டது.
அப்போது பதிவு செய்த எஸ்.ஜி. சூர்யா, "கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளைக் கட்டுப்படுத்தும் தி.மு.க அறக்கட்டளைக்கு உதயநிதி அறங்காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதை நியாயப்படுத்தும் மக்களுக்கு இது புதியது'' என்று பதிவிட்டிருந்தார்.
சூர்யாவின் கருத்துக்கு பதிலலித்த மூன்றாம் கலைஞர் உதயநிதி ஸ்டாலின் "நான் தி.மு.க-வின் அறங்காவலர் என்பதை உங்களால் நிரூபிக்க முடிந்தால் நான் பா.ஜ.க-வில் இணைந்து விடுகிறேன்" என்று தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கு தகுந்த ஆதரங்களுடன் தக்க பதிலடி கொடுத்தார் சூர்யா.
தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அறக்கட்டளைக்கு அறங்காவலராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்ற செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பில் இருக்கிறார் உதயநிதி. https://t.co/L8pdObjCne
— SG Suryah (@SuryahSG) January 24, 2019
முரசொலி மேலாண்மை இயக்குனர் - உதயநிதி ஸ்டாலின்.https://t.co/1eNPHVUsfe
Denying this? https://t.co/g5vym0iiNp