பராமரிப்பின்றி இருக்கும் தொன்மை வாய்ந்த விநாயகர் கோவில் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை ?

பராமரிப்பின்றி இருக்கும் தொன்மை வாய்ந்த விநாயகர் கோவில் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை ?

Update: 2019-02-05 19:00 GMT

திருப்போரூர் மாவட்டம் சிறுங்குன்றம் என்ற கிராமத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. தொன்மை வாய்ந்த இந்த விநாயகர் கோவிலை அறநிலையத்துறையினர் சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீண்ட காலமாக பராமரிப்பற்ற நிலையில் உள்ள இக்கோவில் வளாகத்திலும், கோபுரத்திலும் செடிகள் வளர்ந்துள்ளன. அர்ச்சகர் ஒருவர் தவறாமல் இந்த கோவிலில் பூஜை மேற்கொண்டு வருகிறார். கோவில் திருப்பணி மேற்கொண்டு, இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Similar News