விவசாயிகள் நலன் கருதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகள்..

விவசாயிகள் நலன் கருதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகள்..

Update: 2020-04-07 14:01 GMT

கொரோனா வைரஸ் நோய் தடுப்பதற்காக, 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொது மக்களுக்கு தேவைப்படும் முக்கிய உணவுப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் சிரமம் ஏதாவது இருந்தால் அவர்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட வாரியாகவும், மாநில வாரியாகவும் அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இன்னும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதை கருத்தில் கொண்டு விவசாயிடம் இருந்து வசூலிக்கப்படும் இப்பயன்பாட்டு தொகையை எதிர்வரும் 30ம் தேதி வரை வசூலிக்கப்படமாட்டாது, இக் கட்டணத் தொகையை முழுவதும் அரசு ஏற்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தங்குதடையின்றி நியாயமான விலையில் கிடைத்துவிட கூட்டுப் பண்ணை விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் கூடுதலாக 500 தோட்டக்கலை துறையின் நடமாடும் விற்பனை வாகனங்களின் மூலம் விற்பனை செய்யப்படும், எனவும் அதேபோல சந்தை கட்டணமும் 30ம் தேதி வரை விலக்கு அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Similar News