நடிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விக்ரம்?

நடிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விக்ரம்?

Update: 2020-04-11 05:53 GMT

90 களின் இறுதிகளில் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் விக்ரம், நீண்ட போரட்டத்திற்க்கு பின்னர் 'சேது' படத்தின் மூலம் தன்னை நல்ல நடிகன் என நிரூபித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார். தொடர்ந்து வித விதமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்துவின் 'கோப்ரா' மற்றும் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படங்களுடன் விக்ரம் நடிப்பதை நிறுத்தி கொண்டு திரையுலகிலிருந்து விலகுவதாகப் பிரபல ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. அந்த செய்தி சமூக வலைத்தளம் மூலம் வேகமாகப் பரவி வந்த நிலையில், விக்ரம் தரப்பிலிருந்து அந்த செய்தியின் உண்மையில்லை என்றும், விக்ரம் அடுத்தடுத்த படங்களை ஒப்பந்தம் செய்து வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News